ஜீவ புஸ்தகம் ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண் வஸ்திரம் தரிக்கப்படும்'' தங்களுடைய வஸ்திரங்களைக் கறை படுத்தாத சில பரிசுத்தவான்களைக் குறித்து நான்காம் வசனத்தில் சொல்லப்பட்டதே இங்குத் திரும்பவும் கூறப்படுகிறது. அநேக ஆண்டுகளாக “உன் வஸ்திரங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்'' (Keep your skirts clean) என்னும் பழமொழியை நாம் கொண் டிருக்கிறோம், அது இந்த வசனத்திலிருந்துதான் எடுக்கப்பட்டது என்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு அர்த்தம் “சந்தேகமுள்ள காரியங்களில் தலையிடாதே,'' மற்றவர்கள் தலையிடுவார்கள், நீ தலையிடவேண்டுமென தூண்டப்படுவாய், அல்லது நீ தலையிட யாரோ ஒருவர் முயற்சி செய்யலாம்; ஆனால் அந்த எல்லாவற்றிலு மிருந்து விலகி அதன் புறம்பாகச் செல், என்பதேயாகும். இப்பொழுது இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தேவன் சன்மானம் அளிப்பார். அவர் வெண்வஸ்திரம் தரித்திருப்பது போன்று அவர்களும் வெண்வஸ்திரம் தரிப்பார்கள். மறுரூபமலையில் அவர் வஸ்திரம் வெண்மையாகப் பிரகாசித் ததைப் பேதுரு, யாக்கோபு, யோவான் கண்டனர். அவ்விதமாகவே பரிசுத்தவான்களுக்கும் தரிப்பிக்கப்படும். அவர்களுடைய வஸ்திரங்கள் மிகமிக வெண்மையாக பிரகாசிக்கும். நாம் கடைசி காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த காலத்தில்தான் சபைகள் எல்லாம் ஒன்று சேரப்போகின்றன. ஆகவே அவைகள் உலக அரசியலைக் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது போலவே, விரை வில் அவைகள் உலக பண விவகாரங்களையும் கட்டுப்படுத்தும். அப்படியானால், உலக சபைகளின் ஐக்கியத்தில் (World Council of Churches) சேராவிடில், நீங்கள் கொள்ளவோ விற்கவோ முடியாது. எல்லாவற்றையும் நீங்கள் இழக்க நேரிடும். தேவனுக்கு உண்மையாக இருந்து, இந்த சபை கட்டளைகளான, 'உலக-முறை மைகள்' என்னும் கறையிலிருந்து தங்கள் வஸ்திரங்கள் சுத்தமாய் வைத்திருப்பவர்களிடமிருந்து சகலமும் பறிக்கப்படும். அவர்கள் விட்டுக் கொடுத்துவிடும் விதத்தில் ஒரு பெரிய சோதனை அவர்களுக்கு முன் வைக்கப்படும். பிரசங்கிகள், அந்திகிறிஸ்துவின் மிருக-முறைமையின் சட்டத் திட்டத்திற்குள் தாங்கள் தேவனுக்கு சேவை செய்வோம் என்னும் சாக்குபோக்கு சொல்லி விழுந்து போவார்கள். அவர்கள் மட்டு மீறிய முகப்புகழ்ச்சிக்கும் பதவி முறைகளின் கவர்ச்சி நயத்திற்கும் விழுந்து போய்விடுவார்கள். ஆகவே ஜனங்களும் மக்களும் இந்த கள்ள மேய்ப்பர்களைப் பின்பற்றி, அடிக்கப்படும்படி கொண்டு செல்லப்படுவர். நியாயத்தீர்ப்பில் இவர்களெல்லாரும் நிர்வாணிகளாகக் காணப்படுவர். அவர்களுக்கு வெண்வஸ்திரம் கொடுக்கப்படு வதில்லை; அவர்கள் கர்த்தரோடு நடப்பதில்லை. அழுக்கு படிந்த இவ்வுலகத்தின் வஸ்திரத்தை அணிந்து கொண்டு, பிசாசோடு கைகோர்த்து, அதே சமயத்தில் தேவனோடு சஞ்சரிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. உறக்கத்தினின்று எழுந்து, “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய (ஸ்தாபன மார்க்கங்களின்) பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்'' (வெளி.18:4) என்னும் தேவனுடைய வார்த்தையைக் கேட்க சமயம் வந்துவிட்டது. ஆமென். தேவன் இப்பொழுது பேசுகிறார். வாதையை அகற்றுவதுபோல், இவ்வுலக மார்க் கங்களை அகற்றுங்கள். இவ்வுலகத்தோடு ஒத்து நடப்பதை விட்டு, மனந்திரும்பி, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, உங்கள் வஸ்திரங்களைத் தூய்மையாக்குங்கள். இதை இன்றே செய்யுங்கள். நாளைக்கென்று ஒத்திப்போட்டால், ஒருவேளை தாமதமாகிவிடும். “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ, ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடுவதில்லை.'' வேதாக மத்தின் அதிக கடினமான பாகத்திற்கு மறுபடியுமாக நாம் வருகின்றோம். ஆர்மினியன்களும் (Arminians) கால்வினிஸ்டு களும் (Calvinists) தங்களுடைய காரியங்களுக்கு ஏற்றவாறு இந்த வசனத்தை மேலோட்டமாக எடுத்து பொருத்திக்கொள்வார்கள். இந்த வசனமானது யோவான் 6:37-44ஐ நிச்சயமாகவே செல்லத் தகாததாக்குகின்றது (Annul) என்று ஆர்மீனியன்கள் அறிவிப் பார்கள். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும் நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக் குறித்து முறுமுறுத்து, இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறாமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம். என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத் துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்” (யோவான் 6:37-44). ஆர்மீனிய கொள்கையானது பிதாவினுடைய சித்தம் ஒரு சுயாதீன நோக்கம் அல்லவென்றும், ஆனால் தாம் நின்று கொண்டு, தம் முடைய நல்ல, கிருபையான வரங்களை நித்திய ஜீவனைக் கொண்டு எல்லா மனிதரும் என்ன செய்கின்றனர் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு மனநிறைவான ஒன்று என்று கூறுகிறது. கால்வினிஸ்டுகள் வேறுவிதமாக இவ்வசனத்தை விளக்குகின்றனர். பாரப்பட்ட, கஷ்டப்படும் பரிசுத்தவான்களுக்கு இவ் வசனம் ஆறுதலளித்து, அவர்கள் எவ்வளவு பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்டாலும், காலங்களானது எவ்வளவு தீமையானதாய் இருந்தாலும் சரி, ஏனெனில் ஜெயங்கொள்ளுகிறவன், “இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவன்,'' தன்னுடைய பெயர் அந்த புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படுவதில்லை என்று இது கூறுகிறது என அவர்கள் நம்புகின்றனர். 'ஜீவ புஸ்தகம்' என்பதும் ‘ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்' என்பதும் வித்தியாசமான புத்தகங்களென்று வேறு சிலர் கூறுகின்றனர். ஆகவே வழக்கமாக ஒரு வசனத்தை மேலோட்டமாக ஒருவன் பார்ப்பானென்றால், அவன் ஒரு ஆழமற்ற ஒரு புரிந்துகொள்ளுதலை உடையவனாயிருப்பான். தேவனுடைய ஆவணங்களிலிருந்து (Records) ஒரு பெயரானது கிறுக்கிப் போடப்படுகின்ற ஒரு சாத்தியக்கூறானது ஒரு மேலோட்ட ஆராய்ச்சியைக் காட்டிலும் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டியதாயுள்ளது. ஏனெனில் இன்று வரை அநேக வேதமாணாக்கர்கள், மறுபடியும் பிறந்தவர்களின் பெயர்களை, அவர்கள் மறுபிறப்படையும் நேரத்தில் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் தேவன் எழுதுகிறார் என்றும், ஏதாவது ஒரு காரணத்தால் அந்த பெயர் அகற்றப்படும் என்றால் அந்த இடம் அப்படியே காலியாக விடப்படும், ஏனெனில் அதற்கு முன்பாக அங்கே ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது என்ற ஒரு கருத்திற்கு அவர்கள் வந்துள்ளனர். குறிப்பாக வார்த்தை என்ன போதிக்கின்றதோ அதற்கு நூறு சதவீதம் எதிராக இது இருக்கின்றது. நம்முடைய ஆராய்ச்சியின் ஆரம்பமாக, அறிந்து கொள்ளப் படவேண்டிய ஒன்று என்னவெனில், தேவன் பெயர்கள் கொண்ட ஆவணத்தை இப்பொழுது தொகுத்துக் கொண்டு வருகின்றார் என்று போதிக்கின்ற ஒரு வேதவசனம் கூட இல்லை. இவைகளனைத்தும் உலகத் தோற்றத்திற்கு முன்பு எழுதப்பட்டன என்பதை இன்னும் சிறிது நேரத்தில் காண்பிப்போம். அதுவுமின்றி, நித்திய ஜீவனைப் பெறுவதற்கென அளிக்கப்பட்ட தருணத்தை ஆதாயப்படுத்திக் கொண்டவர்களின் பெயர்கள் மாத்திரம் ஜீவபுஸ்கத்தில் எழுதப் பட்டிருக்கின்றன, அவ்வாறு செய்ய மறுத்தவர்களின் பெயர் இப் புஸ்தகத்தில் இடம் பெறவில்லை என்று நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். மறுபடியும் பிறவாத கணக்கற்றவர்களும் நித்திய ஜீவனில் பிரவேசிப்பார்கள் என்று வேதத்தின் மூலம் நான் நிரூபிக்க முடியும். இது வினோதமான ஒன்றாக காணப்பட்ட போதிலும், இது நிச்சயமாகவே உண்மையாகும். அல்லாமலும், உலகத்தோற்றத்திற்கு முன்னால் அந்த ஆவணத்தில் பெயரெழுதப் பட்ட ஒரு சாராருண்டு; அவர்கள் பெயர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் அகற்றப்படுவதில்லை என்று நாம் காண்பிப்போம். மேலும் உலகத் தோற்றத்திற்கு முன்னால் அந்த ஆவணத்தில் பெய ரெழுதப்பட்ட வேறொரு சாராருண்டு; அவர்கள் பெயர்கள் அப்புஸ்த கத்திலிருந்து அகற்றப்படும் என்பதையும் காண்பிக்க முடியும். ஆரம்பமாக 'ஜீவபுஸ்தகம்' என்பதும் ‘ஆட்டுக்குட்டியான வரின் ஜீவ புஸ்தகம்' என்பதும் ஒரே புஸ்தகமல்ல என்று சிலர் கூறுவதற்கு ஆதாரமில்லை. இவையிரண்டும் ஒரே புஸ்தகத் தைத்தான் குறிக்கின்றன. ஜீவபுஸ்தகம், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம், கிறிஸ்துவின் ஜீவ புஸ்தகம் அல்லது அவருடைய புஸ்தகம், (Thy Book) ஜீவிக்கிறவர்களின் புஸ்தகம் என்னும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம். பெயர்கள் மாத்திரமே இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ''உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்'' (வெளி.13:8). நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது. இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப் போகிறது. உலகத் தோற்ற முதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.'' (வெளி.17:8) ''மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித் தோரை ஒப்புவித்தது. மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியை களின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப் பட்டான்'' (வெளி. 20:12-15). வேதம் அநேக புத்தகங்களைக் குறிப் பிட்டாலும், ஒரு புத்தகத்தை மாத்திரம் பெயர்களடங்கிய புத்தகமாக எப்பொழு தும் குறிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில், இது ‘ஆட்டுக் குட்டியின் ஜீவபுஸ்தகம்' அல்லது ‘ஜீவபுஸ்தகம்' என்று அழைக்கப்படுகிறது. ஜீவபுஸ்தகம் இப்பொழுது எங்கு வைக்கப்பட்டிருக்கிறது? “பின்பு அந்த எழுபது பேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து, ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக் குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி; சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துரு வினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட் டாது. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து, பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத் தரிக்கிறேன்; ஆம் பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொரு வனும் குமாரன் இன்னாரென்று அறியான். குமாரனும் குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந் தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி; நீங்கள் காண்கின்றவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ள வைகள். அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கின்றவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார் (லூக்கா 10-17:24). ஜீவபுஸ்தகம் நிச்சயமாக பரலோகத்தில் வைக்கப்பட்டு, பெரிய வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பின் போது காணப்படும். சீஷர்களின் நாமங்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதாக இயேசு இந்த வசனங்களில் கூறுகிறார். அவைகள் ஜீவபுஸ்த கத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ஏனெனில், அங்குதான் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இயேசு எழுபது சீஷர்களுக்கு மாத்திரமல்ல (17ம் வசனம்), பன்னிருவருக்கும் (23ம் வசனம்) இவைகளைக் கூறுகிறார் என்பதை கவனிக்கவும். பிசாசுகள் இயேசுவின் நாமத்தில் அவர்களுக்கு கீழ்ப்படிகின்றன என்று அவர்கள் சந்தோஷங் கொண்டிருந்தனர். அதற்கு இயேசு “ஆவிகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப் படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற் காக (ஜீவ புஸ்தகத்தில்) சந்தோஷப்படுங்கள்'' என்று பதிலு ரைத்தார். யூதாஸ், பன்னிருவரில் ஒருவனாக இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தினான். அவன் பிசாசென்றும், கேட்டின் மகனென்றும் நாமறிவோம். “இயேசு அவர்களை நோக்கி; பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ள வில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிரு வரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்'' (யோவான் 6:70-71). “நான் அவர்களுடனே கூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டு வந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல் அவர்களில் ஒருவனும் கெட்டுப் போகவில்லை" (யோவான் 17:12) இயேசு அவனை நோக்கி; முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும். மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமா யிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந் திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமல்ல என்றார். உங்க ளெல்லாரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்து கொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறை வேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிக்காலைத் தூக்கினான்'' (யோவான் 13:10-11, 18). மொழி ஒன்றுண்டு என்று நாம் கருதுவோமானால், யூதாஸை இயேசு தெரிந்து கொண்டாலும் (யோவான் 13:18), அவன் சுத்தமாயில்லை (யோவான் 13:10-11) என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். பிதாவானவர் யூதாஸை இயேசுவுக்குத் தந்தார் (யோவான் 17:12). (குறிப்பு : மோசே, பார்வோன், யாக்கோபு, ஏசா இவர்களைத் தேவன் தெரிந்து கொண்ட போதிலும், பார்வோனும் ஏசாவும் கோபாக்கினைக் கென்று முன்னரே நியமிக்கப்பட்டனர். மோசேயும் யாக்கோபும் முடிவில் மகிமை யடைந்தனர்... 1 பேதுரு 2:8 “அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப் படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே நியமிக்கப் பட்டவர்களாயும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயிருக்கிறீர்கள்!'') யூதாஸ் பன்னிருவரில் ஒருவனாக எண்ணப்பட்டு பெந்தெகொஸ்தே காலத்திற்கு முன்னிருந்த ஊழியத்தில் உண்மையாக பங்கு கொண்டான். ''சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக் குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றவனாயிருந்தான் (அப்.1:16-17). யூதாஸ், அந்த பன்னிருவர் நடுவில் பெற்று, இழந்த அந்த ஊழியம், மற்ற சீஷர்களின் ஊழியத்தைக் காட்டிலும் தாழ்ந்ததல்ல; அல்லது இது சீஷர்களின் ஊழியத்தின் மத்தியில் வெளியிலிருந்து ஏற்பட்ட பிசாசின் ஊழியமுமல்ல. “யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்து போன இந்த ஊழியத்திலும்'' (அப்.1:24) என்று வேதம் கூறுகிறது. பிசாசான யூதாஸ், தேவனால் அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் ஊழியத்தையிழந்து, தற்கொலை செய்து கொண்டு, தனக்குரிய இடத்திற்குச் சென்றான். அவனுடைய பெயரும் ஜீவபுஸ்தகத்தில் உண்டாயிருந்து, பின்னர் அகற்றப்பட்டது. இப்பொழுது யூதாஸைப் பற்றி இந்த கருத்தை நாம் மேலுமாக பார்ப்பதற்கு முன், அதே காரியத்தை தேவன் எங்கே செய்திருக்கின்றார் என்பதை நாம் பழைய ஏற்பாட்டிற்கு சென்று பார்ப்போம். ஆதி.35:23-26ல், யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களின் பெயர்கள் பின்வருமாறு. ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்; யோசேப்பு, பென்யமீன்; தாண், நப்தலி; காத், ஆசேர். இந்த பன்னிரண்டு குமாரர்களின் சந்த திகளும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாயின. யோசேப்பின் பெயர் கோத்திரத்தில் பெயரிடப்படவில்லை. ஏனெனில், யோசேப்பின் இரண்டு குமாரர்களான எப்பிராயீம், மனாசே என் பவர்களின் பெயர்களில் சந்ததிகளுண்டாகி, மொத்தம் பதின் மூன்று கோத்திரங்கள் இஸ்ரவேலில் உண்டாக வேண்டுமென்று தேவனுடைய நோக்கமாயிருந்தது. அவைகளில் லேவி கோத்திரத்தார் தேவனுடைய ஆசாரிய ஊழியத்துக்கென்று பிரித் தெடுக்கப்பட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெளி வந்தபிறகு, வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரத்தை அமைக்க தேவன் கட்டளையிட்டார். அப்பொழுது லேவி கோத்திரத்தார் ரூபன், சிமியோன், இசக்கார், யூதா, செபுலோன்; பென்யமீன், தாண்; நப்தலி, காத், ஆசேர்; எப்பிராயீம், மனாசே என்னும் பன்னிரண்டு கோத்திரங்களுக்குப் பணிவிடை செய்தனர். இக்கோத்திரங்களின் பெயர் வரிசை இவ்விதமாக எண்ணாகமம் 10:11-28ல் குறிக்கப்பட்டிருக்கிறது. அதில் யோசேப்பு, லேவி இவர்களின் பெயர் காணப்படவில்லை. ஆனால் “இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்'' (வெளி.7:4) யூதா, ரூபன், காத், ஆசேர், நப்தலி, மனாசே, சிமியோன், லேவி, இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமீன் கோத்திரங்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டனர் என்று வெளிப்படுத்தின விசேஷம் உரைக்கிறது (வெளி.7:5-8). எண்ணாகமத்தில் கூறப்பட்ட பெயர் வரிசையிலிருந்து தாண், எப்பிராயீம் கோத்திரங்கள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக லேவி, யோசேப்பு கோத்திரங்கள் புகுத்தப்பட்டன. தாண், எப்பிராயீம் கோத்திரங்கள் எக்காரணத்தைக் கொண்டு அகற்றப்பட்டன? என்கின்ற கேள்வி இப்பொழுது எழுகிறது. அதற்கான பதில் உபா.29:16-20ல் இருக்கின்றது. “நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்து வந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்து வந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்களுடைய அருவருப்புகளையும், அவர் களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள். ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இதய முள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராத படிக்கும் பாருங்கள். அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக் கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன் மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன் மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின் கீழ் இராதபடிக்குக் குலைத்துப் போடுவார்.'' விக்கிரகாராதனை அல்லது ஆவிக்குரிய விபச்சாரத் தில் ஈடுபடுபவர்களுக்குச் சாபம் இதன் மூலம் அளிக்கப்படுகிறது. அப்படியெனில் விக்கிரங்களை ஆராதித்த கோத்திரங்களின் பெயர்கள் இக்காரணத்தினால் அகற்றப்பட்டன. விக்கிரகார தனையால் இரண்டு கோத்திரங்களின் பெயர்கள் கிறுக்கிப் போடப் பட்ட வரலாறு 1.இராஜா 12:25-30ல் காணப்படுகிறது. “யெரொ பெயாம் எப்பிராயீம் மலைத் தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான். யெரொபெயாம்; இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சவசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப் போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய்விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனை பண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங் களைப் பார்த்து, நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக் குட்டிக்காகத் தாண் மட்டும் போவார்கள்'' (ஓசியா 4:17). “எப்பிராயீம் விக்கிரங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.'' விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டதற்காக “வானத்தின் கீழ்' இராதபடிக்கு அந்த கோத்திரத்தின் பெயர் கிறுக்கிப் போடப் படுகின்ற அந்த தண்டனையை குறிப்பாக கவனியுங்கள் உபா. 29:20. “வானத்தில்'' கிறுக்கிப் போடப்படும் என்று அது கூறவில்லை, ஆனால் வானத்தின் கீழ். ஆகவே அது சரியாக இப்பொழுது உள்ளது, ஏனெனில் இஸ்ரவேல் ஜனங்கள் இப்பொழுது பாலஸ் தீனாவில் சேர்ந்து விட்டார்கள். அவர்களில் 1,44,000 பேரைக் கர்த்தர் முத்தரிப்பார். தாண், எப்பிராயீம் கோத்திரங்களைச் சேர்ந்த வர்கள், முத்தரிக்கப்பட்ட தொகையில் காணப்படாமல் இருக்கின்றன. “முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர், யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீரா யிரம், ரூபன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், காத் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர் கள் பன்னீராயிரம், நப்தலி கோத்திரத்தில் முத்திரை போட்டவர்கள் பன்னீராயிரம், மனாசே கோத்திரத்தில் முத்திரை போட்டவர்கள் பன்னீராயிரம், சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரை போட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரை போட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போட்டவர் கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போட்டவர்கள் பன்னீராயிரம், பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்" (வெளி.7 :4-8) (தாண், எப் பிராயீம் பெயர்கள் காணப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்). இப்பொழுது இதனுடன் ஆறாவது முத்திரை, மற்றும் மகா உபத்திரவத்தின் சமயத்தில் அல்லது யாக்கோபின் இக்கட்டு காலத்தின் சமயத்தில் இந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் குறித்து கூறும் தானி 12:1 உடன் கவனிக்கவும். “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.'' இந்த உபத்திரவக் காலத்திற்குப் பின்பு, (ஆயிர வருஷ அரசாட்சியில்) இஸ்ரவேல் கோத்திரங்கள், எசேக்கியல் 48:1-8 மற்றும் 22-29ல் பார்த்தபடி திரும்பவுமாக தெய்வீக வரிசைக் கிரமத்தில் நாம் பார்க்கின்றோம். ஆகவே, எப்பிராயீமும், தாணும் தங்களை விக்கிரங்களோடு இணைத்துக் கொண்ட சமயம் முதல் அவைகள் மரித்துப்போயின, அக்கோத்திரங்கள் இனி ஒருபோதும் அறியப்படுவதில்லை. இப்பொழுது நான் விளக்கவிவரமாகக் காண்பது என்னவெனில், எருசலேமின் அழிவிற்குப் பிறகு, எல்லா கோத்திரங்களுடைய எல்லா ஆவணக்குறிப்புகளும் (Records) அழிந்து போனது, ஆதலால் தான் எந்த கோத்திரத் திலிருந்து வருகிறான் என்று யாராலும் நிச்சயமாக கூறவே முடியாது, ஆனால் தேவன் அறிவார். இஸ்ரவேலைப் பாலஸ்தீனா வுக்கு திரும்பவுமாகக் கொண்டு வந்துக்கொண்டிருக்கின்ற அந்த மகத்தான தேவனுக்கு ஒவ்வொரு உண்மையான இஸ்ர வேலனும் எந்த கோத்திரத்தை சார்ந்தவன் என்பது சரியாகத் தெரியும், கூடியிருக்கிற எல்லா இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்திலிருந்து தாணும் எப்பிராயீமும் காணப்படுவதில்லை. இங்கே இஸ்ரவேல் கோத்திரங்கள் பின்வருமாறு. எசே. 48:1-8, 22-29 “வடமுனை துவக்கி ஆமாத்துக்குப் போகிற எத் லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் தாணுக்கு ஒரு பங்கும், தாணின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும், ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும், நப்தலியின் எல்லையருகே கீழ்த் திசை துவக்கி மேற்றிசை மட்டும் மனாசேக்கு ஒரு பங்கும், மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும், எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த் திசை துவக்கி மேற்றிசை மட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும், ரூபனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக. அதிபதியினுடையதற்கு நடுவே யிருக்கும் வேலியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணி துவக்கி யும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவே யிருக்கிறது அதிபதியினுடையது (Prince). மற்றக் கோத்திரங் களுக்கு உண்டாகும் பங்குகளாவன. கீழ்த்திசைதுவக்கி மேற்றிசை மட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும், பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும், சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசை மட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும், இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும், செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக.'' நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய அடுத்த எடுத்துக்காட்டு கானான் தேசத்திற்கு பிரயாணமாக எகிப்தை விட்டு வெளியேறும் இஸ்ரவேலின் கதையாகும். இந்த காலத்தில் தேவனுடைய நோக்கம் என்னவெனில் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து, கடைசி வரை அவர்கள் அவரைச் சேவிக்க, கானான் தேசத்திற்குள் கொண்டு செல்ல எத்தனித்தார். எகிப்தை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழாக வெளிவந்தனர். எல்லாரும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து ஞானஸ்நானம் பெற்றனர்; எல்லாரும் மகத்தான அற்புதங்களால் அனுகூலமடைந்தனர்; எல்லாரும் மன்னாவைப் புசித்தனர்; எல்லாரும் கன்மலையின் தண்ணீரைக் குடித்தனர். வெளித் தோற்றமுள்ள ஆசீர்வாதங்களிலும் அற்புதங்களிலும் எல்லாரும் சரிசமமாகப் பங்கு கொண்டனர். மோவாபியரின் எல்லைக்குள் அவர்கள் வந்தபோது பெரும்பாலோர் பாகால் பேயோரின் பண்டிகையில் கலந்து கொண்டு தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்தனிமித்தம் மாண்டு போயினர். அவர்கள் சவங்கள் வனாந்தரங்களில் விழுந்து கிடந்தன. தேவனுடைய நல் வார்த்தையை ருசிபார்த்து, அதை மறுதலிக்கிறவர்களுக்கு இரட்சிப்பில்லை என்று எபிரெயர் 6:1-9 கூறுகிறது. இதற்குரிய விளக்கத்தை 'பெர்கமு சபையின் காலம்' அத்தியாயத்தில் துல்லியமாக கொடுக்கப்பட்டது. வார்த்தையின் ஒரு பங்கை மாத்திரமே எடுத்துக் கொண்டு நீ சென்று கொண்டேயிருக்க முடியாது, வார்த்தையினுடைய எல்லா காரியத்தையும் நீ ஏற்றுக் கொண்டாக வேண்டும். தேவனுடைய விஷயங்களில் முற்றிலுமாக நூறு சதவீதம் ஈடுபடுவராய்க் காணப்படும் அநேகருண்டு. ஆனால் அவர்களெல்லாரும் யூதாஸைப் போன்றிருக்கின்றனர். யூதாஸ் எப்படிப்பட்ட ஆள் என்பதை இயேசுவைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. ஒருநாளில் இஸ்ரவேலர் பாகால்பேயோரில் செய்ததை யூதாஸ் செய்தான். அவன் கள்ள கூட்டங்களுடன் வார்த்தைக்கு- விரோதமான, பண சம்பந்தமான விவகாரங்கள், அரசியல் ஸ்தாபனம், அந்திகிறிஸ்துவின் மார்க்கத்தில் சேர முடிவு செய்தான். ஆகவே அவன் அவ்வாறே செய்தான். அவன் ஏமாற்றப்பட்டான்! மற்ற பதினொரு பேர்களுக்கு அப்படியாக வில்லை. அவர்களை ஏமாற்ற முடியாது, ஏனெனில் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாயிருந்தனர். ஆதலால் யூதாஸ் சென்று கர்த்தரை காட்டிக் கொடுத்த போது அவனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது (வெளி.22:19). இப்பொழுது, ஜீவபுஸ்தகத்தில் பெயர்கள் எழுதப் பட்டிருந்த அவர்கள், சத்தியத்தின்படி (வார்த்தை) தொழுது கொள்ளவில்லை என்றாலும், உண்மையான தேவன் மற்றும் அவரை தொழுது கொள்ளுதலின் பேரிலே அமைந்திருந்த அந்த நாளின் மத ஒழுங்கின் பாகமாக இருந்தனர் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நான் நிச்சயிக்கின்றேன். யூதாஸைப் போலவே அவர்களும் முடிவு பரியந்தம் வரவில்லை. யூதாஸ் தேவனால் எப்படி தெரிந்தகொள்ளப்பட்டவனாயிருந்தான் என்று பாருங்கள். அவன் சத்தியத்தில் போதிக்கப்பட்டவனாக இருந் தான். எல்லா பரம ரகசியங்களையும் அவன் அறிந்திருந்தான். வல்லமையுள்ள ஊழியம் அவனுக்கு அளிக்கப்பட்டது. இயேசுவின் நாமத்தில் அவன் பிணியாளிகளைச் சுகப்படுத்தி, பிசாசுகளை ஓட்டினான். ஆனால் பலப்பரீட்சை வந்தபோது, பொன்னிற்காகவும் அரசியல் ஆதிக்கத்திற்காகவும் தன்னை விற்றுப்போட்டான். தேவனுடைய ஆவியைப் பெற அவன் பெந்தெகொஸ்தே வரை செல்லவில்லை. ஆவி இல்லாதவனாக அவன் காணப்பட்டான். அதைக் குறித்து தவறாக பொருள் கொள்ள வேண்டாம், ஒரு மனிதன் உண்மையாகவே, கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பண்ணப் பட்டு ஆவியின் நிறைவை பெற்றுவனாயிருந்தால் முடிவுபரியந்தம் வசனத்தில் நிலைநிற்பான். அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம். யூதாஸ் தோற்றுப் போனான். அநேக ஜனங்கள் சரியாக அங்கே தோல்வியடைகின்றனர். ஆகவே அந்த வார்த்தைக்குள் செல்ல அவர்கள் தவறும்போது, ஜீவபுஸ்தகத்தி லிருந்து அவர்களுடைய பெயர்கள் எடுத்துக்போடப்படுகிறது. ஜீவபுஸ்தகத்திலிருந்து ஒரு பெயர் எடுக்கப்படுவதைக் குறித்து இன்னுமாக தெளிவாகப் பார்க்க, நம்முடைய சிந்தனைகளை மோசேயின் நாட்களில் இருந்த இஸ்ரவேலுக்கு நாம் மேலும் கவனிப்போம். யாத். 32:30-34 “மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி, நீங்கள்; மகா பெரிய பாவஞ் செய்தீர்கள். உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்குத் திரும்பிபோய், ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும் தேவரீர், அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும். இல்லா விட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்கத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப் போடும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்து கொண்டு போ. என் தூதனானவர் உனக்கு முன் செல்லுவார். ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.'' ஜீவ புஸ்தகத்தில் முன்பு பெயர்கள் கிறுக்கப்பட்டதென்றும், காலம் என்பது இனிமேல் இல்லை என்பதற்கு முன்னாக கிறுக்கப்படுமென்றும் இதிலிருந்து நமக்கு மேலும் தெளிவாகிறது. பொன்னால் செய்யப்பட்ட கன்றுக் குட்டியை வணங்கிய இஸ்ரவேலரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத் திலிருந்து கிறுக்கப்பட்டன. விக்கரகாராதனையின் காரணத்தினால் தாணும், எப்பிராயீமும் தங்களின் கோத்திர உரிமையை இழந்தனர் என்று நினைவு கூறுங்கள். விக்கிரகங்களை வணங்கின எல்லா ருடைய பெயர்களும் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்பட்டது. அக்கினி ஸ்தம்பத்திலிருந்து தேவனுடைய வழிநடத்துதலை இஸ்ரவேல் நிராகரித்து, பொன் கன்றுகுட்டிகளை தொழுது கொள்ள திரும்பினபோது ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்களுடைய பெயர்கள் எடுத்தப் போடப்பட்டன. யாத்.32:33 (எனக்கு விரோத மாய்ப் பாவம் செய்தவன் எவனோ அவன் பேரை என் புஸ்தகத்தி லிருந்து கிறுக்கிப்போடுவேன்) ஆக, விக்கிரகங்களிடம் திரும் பினால் ஜீவ புஸ்தகத்திலிருந்து பெயர்கள் எடுக்குப்படியான தண்டனை அளிக்கப்படுகிறதென்றால், நிச்சயமாகவே இயேசு கிறிஸ்துவை மேசியாகவே ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்த இஸ்ரவேலின் காரியத்திற்கு இன்னும் அதிகமான தண்டனை அளிக்கப்பட்டாக வேண்டும். இது சரியானதாகும். இயேசுவின் அவமானத்தை எடுத்துரைக்கும் 69-ஆம் சங்கீதத்தில் வசனங்கள் 21-28 கூறுகிறது. “என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள், அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களு டைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது. அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப் பண்ணும். உம்முடைய உக்கிரத்தை அவர்கள் மேல் ஊற்றும். உம்முடைய கோபாக்கினை அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக, அவர்கள் வாசஸ்தலம் பாழாகக் கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற் போவதாக. தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. அக்கிரமத்தின் மேல் அக்கிரமத்தை அவர் கள்மேல் சுமத்தும். அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டா திருப்பார்களாக. ஜீவ புஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டு போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப் படாதிருப்பதாக'' யூதர்கள் இயேசுவை புறக்கணித்தபோது தேவன் அவர்களை விட்டு புறஜாதிகளிடம் திரும்பின காரியம் சம்பவித்தது. சரியாக, நேருண்மையாக. அப்போஸ்தலர் 13:46-48 “அப் பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டிய தாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேத வாக்கியத்தின் படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத் தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர் களோ அவர்கள் விசுவாசித்தார்கள்'' இஸ்ரவேலின் கோத்திரங்களிலிருந்து ஜீவ புஸ்தகத்தில் இன்னுமாக பெயர்கள் இருக்காது என்று கூற விழையவில்லை, மாறாக தெரிந்துகொள்ளப்படுதலின் விதியின் மூலமாக இவை களில் (இஸ்ரவேல் கோத்திரங்கள்-தமிழாக்கியோன்) அநேகர் (திரளான ஜனக்கூட்டம் அல்ல) புறஜாதி சபைக் காலத்தில் இருந்து, இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் வந்து, தங்கள் பெயர் களும் ஜீவ புஸ்தகத்தில் இருக்கின்றது என்று காண்பிக்கின்றனர். மேலும் ஐந்தாவது முத்திரையின்படி இரத்த சாட்சிகளாக மரித்த திரளான யூத ஜனக்கூட்டத்திற்கு, கர்த்தரால் வெள்ளை அங்கிகளையும் நித்திய ஜீவனையும் கொடுக்கப்படுவதையும் நாம் காண் பிப்போம். மேலும் அவருடைய வருகையின்போது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் முத்தரிக்கப்படுகின்றனர், அவர் களுடைய பெயர்களும் நீக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கின்றது. மேலும் சங்கீதம் 69ல் மிகத் துல்லியமாக இது உரைக்கப்பட்டிருக்கின்றது, அது இயேசு கிறிஸ்துவை அநீதமாகப் புறக்கணித்த தீயவர்களின் பெயர்களும், அவருடைய மக்களை நிர்மூலமாக்குகிறவர்களின் பெயர்களும் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலரில் பெரும் பாலோர் ஜீவபுஸ்தகத்தில் பெயர் காணப்படும் உரிமையை இழந்தது போன்று, பெரும்பாலான புறஜாதி சபைகளின் மக்களும், தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்து, மிருகத்தின் சொரூ பமான உலக சபைகளின் ஐக்கியத்தில் (Ecumenical movement) பங்கு கொள்வதின் மூலம், ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டு, அவர் களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து அகற்றப்படும். இங்கே வேறொரு காரியமும் கவனிக்கப்பட வேண்டியதா யுள்ளது. அந்த மகத்தான வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பில் ஜனங்கள் வேறு பிரிக்கப்படுகின்றனர். ஜீவ புஸ்தகம் திறக்கப் படும். மேலும் இன்னுமொரு புஸ்தகமும் திறக்கப்படும். மத். 25:31-36, “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்ப னானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ் வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறி யாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலப் பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக் காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங் கொடுத் தீர்கள்; தாகமாயிருந்தேன்; என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனா யிருந்தேன், என்னை சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந் தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். அப்பொழுது நீதிமான்கள் அவருக்குப் பிரதி யுத்திரமாக, ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசி யுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனம் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மை சேர்த்துக் கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திர மில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிற வராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தராக, மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்பார். அப்பொழுது, இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, அவர், சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போடுங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு போஜனங் கொடுக்கவில்லை, தாகமாயிருந்தேன். நீங்கள் என் தாகத்தை தீர்க்கவில்லை. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங் கொடுக்கவில்லை. வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக, ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும் அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலி லடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்'' வெளி. 20:11-15 “பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்கா சனத்தையும் அதின் மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன், அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோ ராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவ னெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்'' இந் நியாயத் தீர்ப்பிலே நீதிமான்களும், அநீதி செய்தவர்களும் இருப்பார்கள் என்று நாமறியலாம். அது அவ்வாறு கூறுகின்றது. இந்த நீதிமான்கள் மணவாட்டியாயிருக்க முடியாது. ஏனெனில் நியாயத் தீர்ப்பில் மணவாட்டி அவரோடு உட்காருவாள். 1 கொரி. 6:2-3 ''பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயத்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? தேவதூதர்களையும் நியாயந் தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக் கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?'' வெளி. 3:21.“நான் ஜெயங்கொண்டு என் பிதாவி னுடைய சிங்காசனத்திலே அவரோடகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்கா சனத்தில் என்னோடே உட்காரும்படிக்கு அருள் செய்வேன்'' பாருங்கள், மணவாட்டி சிங்காசனத்தில் அவரோடு இருக்கின்றாள். அவள் உலகத்தை நியாயந்தீர்க்கப் போவதால், நியாயத்தீர்ப்பில் அவருடன் அவள் உட்கார்ந்திருக்க வேண்டும். அதைத்தான் தானியேல் சரியாகக் கண்டான். தானி. 7:9-10. “நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனம் வைக்கப்பட்டது. நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார், அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும், அவருடைய சிரசின்மயிர் வெண்மை யாகவும் பஞ்சைப் போலத் துப்புரவாகவும் இருந்தது. அவ ருடைய சிங்காசனம் அக்கினி ஜூவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது. ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள். கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாய சங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது'' பாருங்கள், அது அதே காட்சியாகும், ஏனெனில் அவரை சேவித்துக் கொண் டிருக்கும் ஆயிரமாயிரம்பேர் மணவாட்டியாகும், ஏனெனில் மனைவியேயல்லாமல் கணவனுக்கு ஊழியஞ் செய்பவர் வேறு யார்? ஏன் இந்த நீதிமான்கள் நியாயத்தீர்ப்பில் காணப்பட வேண்டும்? இப்பொழுது இந்த கேள்வி எழுகின்றது. இவர்கள் வரத்தக்கதாக வேறு எந்த இடமும் இல்லை, ஏனெனில் இரண்டு உயிர்த்தெழுதல்கள் உள்ளன. ஆகவே முதலாம் உயிர்த்தெழுதலுக் காக இவர்கள் தகுதி பெறக்கூடாமலிருந்ததால் இரண்டாவ தாகிய நியாயத்தீர்ப்புக்கேற்ற உயிர்த்தெழுதலில் வரவேண்டியவர் களாயிருக்கின்றனர். முதலாம் உயிர்த்தெழுதலுக்காக தகுதிபெறு கின்றவர்கள் (மணவாட்டி) நியாயத்தீர்ப்பில் இல்லை.யோவான். 5:24, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. (அதாவது ஒரு விசுவாசி ஏற்கனவே நித்திய ஜீவனைப் பெற்று அதனை இப்பொழுது சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறான்). அவன் ஆக்கினைத் தீர்ப் புக்குட்படாமல் (அது உண்மையாக என்ன கூறுகிறதென்றால், நியாயத்தீர்ப்பிற்குள் வருவதில்லை) மரணத்தைவிட்டு நீங்கி, (நிரந்தரமாக) ஜீவனுக்குப்பட்டிருக்கிறான்'' ஆனால் கவனமாக பாருங்கள், ஒரு குறிப்பிட்ட உயிர்த்தெழுதலில் நித்திய ஜீவனைப் பெறுகின்ற இன்னும் ஒரு கூட்டத்தாரை இயேசு சிந்தையில் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் உயிர்த்தெழுதலில் அதைப் பெறுவர், மணவாட்டியின் ஒரு அங்கத்தினனாக முன்னதாகவே அவர்கள் அதை பெற்றிருக்க மாட்டார்கள். யோவான் 5:28-29. “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும். அப்போது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், புறப்படுவார்கள். இப்பொழுது - யோவான் 5:28-29 எடுத்துக்கொள்ளப்படுதல் (Rapture) அல்ல, என்பது நம் எல்லோருக்கும் தெரியும், ஏனெனில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மாத்திரமே அந்த நேரத்தில் கல்லறைகளிலிருந்து எழுந்து இன்னுமாக பூமியில் ஜீவித்துக்கொண்டிருக்கின்ற மணவாட்டியுடன் எடுத்துக் கொள்ளப்படுவர் 1 தெச. 4:16-17. 'ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்'' ஆனால் யோவான் 5:28-29ல் பிரேதக் குழியிலுள்ள அனைவரும் வெளி வருவர் என்று கூறப்படுகின்றது. அந்த அதே உயிர்த்தெழுதல்தான் வெளி. 20:11-15 உரைக்கப்பட்டிருக்கின்றது. அப்பொழுது மரித்தோர் கர்த்தருக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டு தங்கள் தங்கள் கிரியைகளின்படி நியாயத் தீர்ப்படை வார்கள். ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவ னெவனும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். ஒருவன் கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது அழிந்துபோக வேண்டும் என்று அப்போஸ்தல நிருபங் கள் தெளிவுபட சுட்டிக்காட்டுகின்ற வேளையில், நியாயத்தீர்ப்பில் அவர்களுக்கு ஏன் நித்திய ஜீவன் கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற ஒரு கேள்வியை நாம் இப்பொழுது சந்திக்கின்றோம். ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களில் சிலர் பொதுவான உயிர்த்தெழுதலுக்கு முன்பும் சிலர் அதற்குப் பின்பும் நித்திய ஜீவனைப் பெறுவர் என்று இயேசு கூறிய வார்த்தைகளை நாம் சந்தேகிக்க முடியாது. பவுல் இந்த உண்மையை அவன் தவிர்க்கவில்லை, ஏனெனில் பிலி. 3:11ல் “எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியா யிருக்கும்படிக்கு'' மிகத் தெளிவாகக் கூறுகின்றான். இப்பொழுது இந்த கூற்று மிகவும் வினோதமாக உள்ளது. நாம் விரும்பு கிறோமோ அல்லது இல்லையோ நாமெல்லாரும் ஒரு உயிர்த் தெழுதலில் இருக்கப் போகின்றோம் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். எல்லாரும் உயிர்த்தெழுவர். “எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக் கும்படிக்கு' ஆதலால் பவுலும் இடர்ப்பட்டுக் கூறியிருக்க வேண்டும். இந்தக் கூற்றின் உண்மையென்னவெனில், அவன் அதைக் குறித்து கூறவில்லை. இதனுடைய வெளிப்படையான பொருள் என்னவெனில், “எப்படியாயினும் நான் மரித்தோரி லிருந்து 'வழக்கமானதை விடப் பெரிதான- உயிர்த்தெழுதலில்' உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கு'' என்பதாகும். இது பொதுவான அல்லது இரண்டாம் உயிர்த் தெழுதலை அடைவது அல்ல, ஆனால் முதலாம் உயிர்த்தெழுதலை அடைதல் ஆகும், அதைக் குறித்து ''முதலாம் உயிர்த்தெழுத லுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக் கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியரா யிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்'' என்று கூறப்படுகின்றது. முதலாம் உயிர்த்தெழுதலுக்கும் இரண் டாம் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆயிரம் வருஷ முடிவில் மரணமடைந்த மற்றவர்கள் உயிரடைவார்கள். ஆகவே அந்த நாளில் நித்திய ஜீவனுக்காக வருவோர் சிலர் இருப்பர், இரண்டாம் மரணத்தில் அகப்படுகின்ற மற்றவர்களும் இருப்பர். இப்பொழுது இரண்டாவது உயிர்த்தெழுதலில் ஜீவன் அளிக்கப்பட்டவர்களைக் குறித்து யூகிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அவர்கள் “சகோதரர்களிடம்" இரக்கமாகவும் நலம் பயக்கும் விதமாக இருந்தபடியால், அந்த ஆதாரங்களின் பேரில் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது என்று நமக்குக் கூறப்படுகின்றது. உயிரோடெழுப்பப்பட்டு அக்கினிக் கடலில் தள்ளப்படும் அவர்களுக்கு “சகோதரரை’ மோசமாக நடத்தி யதற்காக அவ்வாறு செய்யப்படுகின்றது. இது தேவனுடைய வார்த்தையாக இருப்பதனால் நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கே தர்க்கம் செய்ய ஒன்றுமில்லை. இது ஒரு மெய்நிகழ்வுக்குரிய சாதாரண கூற்றாகும். இன்னுமாக இதைத் தெளிவாக்கிக் கொள்ள, மத்தேயு 25:31-46ல் உள்ள வார்த்தைகளை குறிப்பாக கவனியுங்கள்: மேய்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரித்தான் என்றில்லாமல், ஆனால் மேய்ப்பனானவன் செம் மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிப்பது போல, என்று கூறுகிறது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இவை செம்மறியாடுகள் அல்ல (வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு). செம்மறியாடுகள் அவருடைய மந்தையில் இருக்கின்றது, அவைகள் அவருடைய சத்தத்தை (வார்த்தை) கேட்டு அவருக்குப் பின் சென்றன. அவைகள் ஏற்கனவே நித்திய ஜீவனைக் கொண்டிருக் கின்றனர். ஆகையால் நியாயத்தீர்ப்பிற்குள் வரமுடியாது. ஆனால் இவைகளுக்கோ நித்திய ஜீவன் இல்லை, ஆதலால் இவர்கள் நியாயத்தீர்ப்பில் காணப்படுகின்றனர். இவர்கள் நித்திய ஜீவனுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் எந்த ஆதாரத்தின் பேரில் இவர்கள் நித்திய ஜீவனுக்குள் செல் கின்றனர்? மணவாட்டி கொண்டிருப்பது போல அவருடைய ஜீவியத்தை ஏற்கனவே கொண்டிருந்தனர் என்கின்ற கூற்றின் பேரில் நிச்சயமாக இல்லை, ஆனால் அவருடைய சகோதரரிடத்தில் இரக்கமாயிருந்தபடியால் அதை இவர்கள் பெற்றுக் கொள் கின்றனர். இவர்கள் அவருடைய சகோதரர் அல்ல. அது இவர்களை இயேசுவோடு உடன் சுதந்தரர்களாக்கி விடும். ஜீவனைத்தவிர வேறு எதற்கும் இவர்கள் சுதந்தரவாளிகள் இல்லை. அவருடன் இவர்கள் சிங்காசனம், மற்ற எதையும் பகிர்ந்துகொள்வதில்லை. இவர்களுடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் காணப்பட்டு அழிக்கப்படாதிருக்க வேண்டும். இப்பொழுது, தேவனுடைய ஜனங் களிடம் தாங்கள் கொண்டிருந்த அன்பிற்காக இவர்கள் அங்கீகரிக்கப்பட்டு இரட்சிக்கப்படுகின்றனர். இவர்கள் தேவ னுடைய பிள்ளைகளுக்கு பணிவிடை மற்றும் உதவி செய் திருப்பார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. ஒருக்கால் நிக்கொதேமையும் கமாலியேலையும் போன்று, இவர்கள் துன்ப காலத்தில் தேவனுடைய பிள்ளைகளுக்காக நின்றனர். இது “திரும்ப கொண்டுவருதல்'' என்ற ஒரு கூற்றை காண் பிப்பதைப்போல இருந்தால், இப்பொழுது ஜாக்கிரதையாக கவனியுங்கள். பொல்லாங்கானவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவதில்லை. ஆனால் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டனர். அழிக்கப்பட்டவர்களில் அநேகரின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் காணப்பட்டன. தங்கள் நாளிற்கென வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை வாழ்ந்து காட்டுகின்ற (ஜீவிக்கின்ற நிருபங்கள்) தேவனுடைய ஜனங்களை அவமதித்ததன் காரணமாக அவர்கள் பெயர்கள் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்பட்டன. இப்பொழுது இங்கே நாம் தெள்ளத்தெளிவாக பார்ப் போமாக. யூதர்களுக்கு தஞ்சம் அளித்து உதவி செய்ததால், நியாயந்தீர்க்கப்பட்டு பிறகு ஆயிர வருட அரசாட்சிக்குள் செல் கின்ற தேசங்கள் இவர்கள் அல்ல. ஏனெனில் இந்த வசனங்களின் முடிவில் அது தெளிவாகின்றது. “இவர்கள் (பொல்லாங்கர்) நித்திய ஆக்கினையை அடையவும் (அக்கினிக் கடல்) நீதிமான் களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்'' பொல்லாங் கானவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்படுகின்ற இரண்டு நியாயத்தீர்ப்புகளுக்கான குறிப்பு எதுவுமே இல்லை. அந்த பெரிய உபத்திரவத்தின் முடிவில் மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் மாத்திரமே நியாயந்தீர்க்கப்படுகின்றனர். இல்லை, இது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாகும், ஆகவே புஸ்தகங்களில் எழுதப் பட்டிருக்கின்ற பிரகாரமாகவே அவர்கள் நியாயந்தீர்க்கப்படுகின்றனர். ஐந்தாவது முத்திரையின் கீழே காணப்படும் “பலிபீடத்தின் கீழ் இருக்கின்ற ஆத்துமாக்களுக்கு இரண்டாம் உயிர்த்தெழுதலில் (வெளி. 6:9-11) வெள்ளை அங்கிகள், கூறப்போனால் நித்திய ஜீவன் அளிக்கப்படுகின்றது, அல்லவென்றால் வெள்ளை அங்கிகளைக் குறித்து எந்த ஒரு காரியமும் இருக்காது. “அவர் ஐந்தாம் முத் திரையை உடைத்தபோது, தேவ வசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன். அவர்கள் பரிசுத்த மும் சத்தியமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடி யிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எது வரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகாசத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப் பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய் யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக் காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர் களுக்குச் சொல்லப்பட்டது'' பலிபீடத்தின் கீழ் காணப்படும் யாவரும் இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் கொல்லப் படவில்லை என்பதைக் கவனிக்கவும். அந்திப்பாவைப் போன்று, அவருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டதன் காரணமாக அவர்கள் கொல்லப்படவில்லை. அப்படியெனில் இவர்கள் மறுபடியும் பிறந்து, நித்திய ஜீவனைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்ளவில்லை. வார்த்தையின் பேரில் அவர்கள் கொண்டிருந்த நிலையினால், உயிர்த்தெழுதலில் வந்து ஜீவனைப் பெற்றுக் கொள் கின்றனர். ஆகவே கவனியுங்கள், எப்படி இவர்கள் பழிவாங்க வேண்டுமென கூக்குரலிடுகின்றனர். அவர்கள் மணவாட்டி யாயிருக்க முடியாது. மணவாட்டியோ கன்னத்தைக் காட்டி ''பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்'' என்று தங்களைத் துன் புறுத்தினவர்களுக்காகப் பரிந்து பேசியிருப்பார்கள். ஆனால் அவர்களோ தங்களைக் கொன்றவரைப் பழிவாங்க வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர். நான்காம் முத்திரையில் புறஜாதி களின் சபை எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இவர்கள் ஐந்தாம் முத்திரையில் காணப்படுவதால் யூதர்களாயிருக்க வேண்டும். அப்படியெனில் இந்த யூதர்கள் அவருடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களல்ல. இயேசு மேசியாவென்பதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. ஆனால் புறஜாதிகளின் நிமித்தமாக தேவனால் அவர்கள் குருடாக்கப்பட்டதால், அவரிடம் அவர்களால் வர முடியாதிருந்தும், இன்னுமாக தாங்கள் தெரிந்து வைத்திருந்த எல்லா வார்த்தைக்கும் அவர்கள் மிக உண்மையாக இருந்ததால் அதில் வைராக்கியம் காண்பித்ததற்காக ஹிட்லர், ஸ்டாலின் போன்றவர்களால் கொல்லப்பட்டனர், இனியும் கொல்லப் படுவர். இதன் காரணமாகத் தேவன் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தார். இரண்டாவது உயிர்த்தெழுதலில் இந்த ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் வருகின்றனர். அவர்கள் கன்னிகைகள் என்பதை கவனியுங்கள். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாததால், இவர்கள் மணவாட்டியாயிருக்க முடியவில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்ற ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டியின் பாகமாயினர். புத்தியற்ற கன்னிகைகள் பிரித்தெடுக்கப்பட்டவர்களாய், தேவ னிடத்தில் அன்புகூர்ந்து, தாங்கள் அறிந்தவரை தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றி, அவருடைய ஊழியத்தில் துணையா யிருந்ததால், கடைசி காலங்களில் உயிரோடெழுந்து நித்திய ஜீவனை அடைவார்கள். இந்த சத்தியங்களினால் நீங்கள் காணத் துவங்குகின்ற, நாம் எப்போதுமே நினைத்ததை அல்லது விசுவாசித்ததைக் காட்டிலும் மிக முக்கியமான, மகத்தான அந்த ஆயிர வருட அரசாட்சியை அவர்கள் தவற விடுவர். மேற்கூறிய அனைவரின் பெயர்களும் ஜீவ புஸ்தகத்தில் இருந்தன, அவைகள் அழிக்கப்படவில்லை. அப்படியெனில் யாருடைய பெயர்கள் அழிக்கப்படும்? மணவாட்டியை எதிர்த்துப் போராடிய உலக சபைகளின் ஐக்கியத்திலுள்ளவர்களின் பெயர்களனைத்தும் அகற்றப்படும். அவர்கள்தான் இழப்பவர்கள். அவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்படுவார்கள். நாம் இதுவரை சிந்தித்ததை மறுபடியும் சுருக்கமாகக் கூறு வோம். முதலாவதாக தேவனுடைய நோக்கம் தெரிந்து கொள்ளுதலில் இருக்கின்றது என்பதை நாமெல்லாரும் மிக நிச்சயமாக அறிந்திருக்கின்றோம். அது அவர் தமக்குள் கொண் டிருந்த நோக்கமாகும். தம்மைப்போலவே வார்த்தை மணவாட்டி யாக இருக்கின்ற ஜனங்களை கொண்டு வருவதே தேவனுடைய நோக்கமாகும். இவர்களனைவரும் அவருக்குள் உலகத் தோற்றத் திற்கு முன்பு தெரிந்து கொள்ளப்பட்டனர். காலாகாலங்களில் இப் பூலோகத்தில் தோன்றுவதற்கு முன்னமே இவர்கள் எல்லாரையும் தேவன் முன்குறித்து அவர்களிடத்தில் அன்பு கூர்ந்தார். மணவாட்டியானவள் அவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டு ஆக்கினைத்தீர்ப்புக்குள் வரமாட்டாள். அவளுடைய பாவத்தைத் தேவன் எண்ணாமலிருப்பதால், அவள் நியாயந் தீர்க்கப்படு வதில்லை. ரோமர் 4:8. “எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணா திருக்கிறாரோ, அவன் பாக்கியவான்.'' உண்மையாய் அவள் அவரோடு சிங்காசனத்தில் வீற்றிருந்து, உலகத்தையும் தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்பாள். அவளுடைய பெயர் (அவளின் ஒவ்வொரு அங்கத்தினர்) உலகத்தோற்றத்திற்கு முன்பாக ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தின் ஒரு பாகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. இரண்டாவதாக, மற்றொரு குழுவும் இருக்கின்றது. இவர்களுடைய பெயர்களும் ஜீவ புஸ்தகத்தில் இருக்கின்றது, இரண்டாம் உயிர்த்தெழுதலில் அவர்கள் வருவர். மத்தேயு 25ல் கூறப்பட்டுள்ள நீதிமான்களும் புத்தியில்லாத கன்னிகைகளும் இவ்வாறே தான். இந்த குழுவில் மிருகத்தை வணங்காமலும், அந்திக் கிறிஸ்துவின் மார்க்கத்தில் பங்கு கொள்ளாமலும், தாங்கள் பற்றின விசுவாசத்தின் காரணமாய்க் கொல்லப்பட்டவர்களும், இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்குகொண்டு நித்திய ஜீவனில் பிரவேசிப்பார்கள். இவர் களுடைய பெயர்களும் ஜீவ புஸ்தகத்தில் காணப்படும். மூன்றாவதாக, பெயர்க்கிறிஸ்தவர்கள்; எகிப்தை விட்டு வெளி யேறிய இஸ்ரவேலரைப் போன்று, ஜீவ புஸ்தகத்தில் தங்க ளுடைய பெயர்களைக் கொண்டிருந்தார்கள், அவர்களுடைய கிரியைகளும் புஸ்தகங்களில் எழுதப்பட்டிருந்தன. அவர்கள் மத்தியில் அடையாளங்களும் அற்புதங்களும் இருந்தபோதிலும், ஆவியைப் பெறாமல் தேவனுக்கு கீழ்ப்படியத்தவறினர். ஜீவ புஸ்தகதத்தில் காணப்பட்ட அவர்களின் பெயர்கள் கிறுக்கிப் போடப்படும். இந்த குழுவில் யூதாஸைப் போன்று, ஆவியைப் பெறாமல், ஆனால் பக்தியாக, தங்கள் ஜீவியங்களில் அற்புத அடையாளங்களைக் கொண்டிருப்பர், ஆனாலும் புஸ்தகங்களில் அவருக்குள் தெரிந்துகொள்ளப்படாமலிருப்பர். இந்த குழுவில் பிலேயாமைப் போன்றவர்களும் இருப்பர். முடிவாக, நான்காவ தாக புஸ்தகங்களில் பெயர் எழுதப்பட்டிராத அல்லது எழுதப்பட முடியாதவர்கள் ஆவர். வெளி. 13:8 மற்றும் வெளி. 17:8ல் இவர்களைக் காணலாம், ''உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்'' “நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப் போகிறது. உலகத் தோற்ற முதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இல்லாமற் போனதும், இனி இருப்பதுமா யிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்'' ஒரு கூட்டம் சுய நாமத்தில் ஒருவனை ஏற்றுக் கொள்ளும் என்று இயேசு தாமே கூறியிருக்கிறார். அவன்தான் அந்திக்கிறிஸ்து இவர்களைக் குறித்துதான் சரியாக வெளி. 13:8 மற்றும் 17:8 கூறுகின்றது. இவர்கள் தேவனால் நியமிக்கப்பட்டாலும், தெரிந்து கொள்ளப்படவில்லை. பார்வோன் இவர்களில் ஒருவன், ''மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படி யாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும் படியாகவும் உன்னை நிலை நிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது'' (ரோமர் 9:17). அன்றியும், “தேவன் தம்முடைய கோபத்தைக் காண்பிக்கவும் தம்முடைய வல்லமையைத் தெரிவிக்கவும் இவர்கள் அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்'' (ரோமர் 9:22-23) இவர்களைக் குறித்து எந்த ஒரு குறிப்பும் இல்லையென்று நான் கூறவரவில்லை. இவர்களைக் குறித்து ஏதோ ஒருவிதமான குறிப்பு இருக்கின்றது, ஆனால் ஜீவனைக் குறித்த குறிப்புகளில், ஆவணங்களில் (Records) இல்லை. அவர்கள் இருப்பதற்கான நோக்கத்தைக் குறித்து இந்த புத்தகத்தில் மேலோட்டமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு வேத வசனங்களை நாம் சேர்த்து பார்க்க முடியும். "கர்த்தர், தீங்கு நாளுக்காக துன்மார்க்கனை உண்டாக்கினார்.'' (நீதி.16:4) "துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினை நாளுக்கென்று கொண்டு வரப்படுகிறான்'' (யோபு 21:30) மேற் கூறிய வசனங்கள் துன்மார்க்கன் ஜீவிப்பதன் நோக்கத்தை எடுத் துக் காட்டுகிறது. துன்மார்க்கன் அழிவுக்கென்று நியமிக்கப்படுவது மனித ஞானத்திற்கு எட்டாத ஒரு காரியமாயிருப்பதால், அது விசுவாசத் தோடு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். நான் கூறுகிறது சிலரை புண்படுத்தும். தேவனின் சுயாதிபத்தியத்தை (Sovereignty) அநேகம் பேர் புரிந்து கொள்வதில்லை. தேவன் தேவனாயிருக்கிறார். ஆகையால் அவருடைய ஆலோசனையை யாரும் மாற்ற முடியாது. அவருடைய சித்தமும் நோக்கமும் நிறைவேறுவதை யாரும் தடை செய்ய முடியாது. அவர் சர்வ வல்லவராயிருப்பதால், எல்லாக் காரியங் களிலும் அவர் ஆளுகை செய்து, அவருடைய மகிழ்ச்சிக்கென்று உண்டாக்கப்பட்ட சிருஷ்டிகளுக்குத் தம்முடைய சித்தம் போல் யாவற்றையும் செய்கிறார். பவுல் கூறும் வண்ணம், மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே தேவன் ஒரு பாத்திரத்தைக் கனமாக காரியத் துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் உண்டாக்கினால், அவரை யார் குறை கூறமுடியும்? (ரோமர் 9:21). நாம் அவருடைய சிருஷ்டிகளாயிருப்பதால், நம்மேல் அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு. நாம் அதை மறுக்க முடியாது. அது மாத்திரமின்றி, இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தினாலே நம்மைக் கிரயத்துக்கு கொண்டபடியால், நாம் அவருக்குச் சொந்தமாகிறோம். அவருக்குச் சொந்தமானவர்களுக்கு அவர் சித்தப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம் என்ற மறுக்கமுடியாத நிரூபணத்தை நாம் பெற்றிருக்கிறோம். ரோமர் 14:7-9 "நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக் கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவும் மரித்தோர் மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருக்கும் பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.'' (உரிமையுடைமை: இங்கே உறவு பற்றி குறிப்பிடவில்லை.) யோவான் 17:2 - நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும் பொருட்டு, மாம்சமான யாவர் மேலும் நீர் அவருக்கு அதிகாரங் கொடுத்தபடியே...'' தேவன் சர்வத்தையும் அறிந்தவர் (Oinniscient) என்று நாம் அங்கீகரிப்போமாயின், அவருடைய ஞானமும் நீதியும் பரிபூரணமானவை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்படுதலும், அழிவுக்கென்று நியமிக்கப்படுதலுமாகிய திட்டம் எல்லாக் காலங்களிலும் வெளிப்பட்ட தேவனுடைய ஞானமாயிருக்கிறது. எபே. 1:3:11ல் கூறுகின்றபடியே “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்த முள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக் கிறார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவ ருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப் பண்ணி னார். காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளு மாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டு மென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். மேலும் கிறிஸ்துவின் மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப் பட்டோம்'' தேவன் சிலரை மணவாட்டியாகத் தெரிந்து கொண்டு அவர்களின் பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்த கத்தின் ஒரு பாகத்தில் வைத்து அது எப்போதும் அழிக்கப் படுவதில்லை என்று திட்டங்கொண்டால், அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். சிலருடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் காணப்பட்டு, தேவனுடைய முன்னறிவில் அவர்கள் பாவத்தில் விழுந்து அவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுக் கப்பட வேண்டும் என்றிருந்தால், அதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிலரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படவே யில்லை யென்றும், வேறு சிலர், தேவனுடைய தெரிந்து கொள்ளுத லாகிய அவருடைய சகோதரரிடத்தில் இரக்கமாகவும், நல்ல விதமாகவும் மற்றும் நீதியாகவும் இருந்தால், அதன் அடிப் படையில் வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப் பிறகு நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள் என்றால் அவைகளை நாம் ஏற்றுக் கொள்ளாமலிருக்க முடியாது. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? விசுவாசத்தின் மூலம் நம்முடைய பிதாவுக்கு கீழடங்கி ஜீவிப்போமாக. இந்தப் பொருளைக் குறித்து இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள, சபையின் காலங்களினூடாக மையமாக வைத்து அணுகுவோம். இதுவரை, தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுக்கப்படுவதைக் குறித்து நாம் சிந்தித் தோம். இப்பொழுது நாம் தனிப்பட்ட நபர்களைக் குறித்து பார்க்காமல் சபையில் இருக்கின்ற குழுக்களைக் குறித்து நாம் பார்ப்போம். காலா காலங்களில் அமைக்கப்பட்ட சபையை, ஒரு கோதுமைச் செடிக்கு ஒப்பிடலாம். ஒரு கோதுமை மணி, நிலத் தில் புதைக்கப்பட்டு, அழுகி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அநேக கோதுமை மணிகளைக் கொடுக்கிறது. அந்த தனிப்பட்ட விதையானது மரிக்கும், ஆனால் மரிக்கையில், அதினுள் இருந்த ஜீவனானது ஒரு செடிக்குள் வந்து அடுத்ததாக அது பெருகின விதமாக மூலத்தன்மைக்கு திரும்பி வர இருக்கின்ற அந்த ஜீவனை சுமக்கின்ற அல்லது தூக்குகின்ற ஒன்றாக இருக்கும். அந்த மகத் தான இராஜரீக வித்தாகிய இயேசு மரித்தார். சபைக்கு ஜீவனா யிருக்கும் இந்த தன்னிகரற்றவர், ஏழு சபைகளின் காலங்களிலும் சபையின் மத்தியிலிருந்து, தம்முடைய ஜீவனை சபைக்கு அளிக் கிறார். சபையின் மக்களுக்குள் அந்த ஜீவன் பாய்ந்து, உயிர்த் தெழுதலின் நாளில் அவர் பெற்ற மகிமையின் சரீரத்தைப் போன்ற சரீரங்களை அவர்கள் பெறுவர். உயிர்த்தெழுதலின்போது அந்த ராஜரீக வித்து தம்மைப்போன்று உள்ள அநேக ராஜரீக வித்துகளைக் காண்பார், அவரைப் போலவே அவர்களும் இருப்பர். யோவானும் “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ண மாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பா யிருப்போமென்று அறிந்திருக்கிறோம்'' என்று கூறுகிறான். இயேசு கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் என்று யோவான் ஸ்நானன் குறிப்பிடுகிறான். நித்திய ஜீவனிற்கென்று தெரிந்து கொள்ளப்பட்ட மீட்கப்பட்டவர்கள் உள்ளே வருகின்ற உயிர்த் தெழுதல் அது தான். இப்பொழுது, ஆகவே, இந்த கோதுமை செடியின் சரித்திரம் என்னவென்றால் அதன் முடிவில் அந்த மூலவித்தை பலமடங்காக திரும்ப எடுத்து உதவும் ஒன்றாகும். அதன் வடிவம் தான் ஜீவ புஸ்தகம். ஆகும். நான் திரும்பவும் கூறுகிறேன். இந்த கோதுமைச் செடியின் சரித்திரம் அல்லது குறிப்பு என்னவென்றால் ஜீவ புஸ்த கம், ஜீவபுஸ்தகத்தின் ஒரு பாகம் நித்திய ஜீவனின் குறிப்புப் புஸ்தகம் (Record of Eternal Life). (ஜீவ புஸ்தகத்தின் ஒரு பாகம்) கோதுமைச் செடியை ஆராய்வதின் மூலம் தெளிவாகக் காணலாம். ஒரு வித்து விதைக்கப்படுகின்றது. விரைவில் செடியின் நுனி காணப்படுகின்றது. ஆனால் அது கோதுமை அல்ல. அது தண்டாக வளருகின்றது. ஆனால் கோதுமை இல்லை. ஆகவே தண்டிற்கு பிறகு ஒரு சிறிய முனைக்கதிர் பட்டுக்குஞ்சத்தை வெளியே அனுப்பும். இன்னுமாக அது கோதுமைச்செடி. ஆனால் கோதுமை இன்னும் இல்லை. பிறகு மகரந்தம் வருகின்றது, பிறகு உமி வளர்கிறதை நாம் பார்க்கிறோம். இது கோதுமையைப் போன்று பெரிதாகக் காணப்படும், ஆனால் இன்னுமாக அது விதை அல்ல. பிறகு பதரில் கோதுமை உருவாகின்றது. இப்பொழுது மறுபடியுமாக துவக்கத்தில் எப்படி இருந்ததோ அதுபோன்று இருக்கின்றது. இப்பொழுது முதிர்ந்த கோதுமை அறுவடை செய்யப்படுகின்றது. இயேசுகிறிஸ்து மரித்துத் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். அந்த ஜீவன் திரும்பவும் சபையின் மேல் இறங்கி அதன் மூலம், உயிர்த்தெழுதலில் இயேசுவைப் போன்று மகிமையின் சரீரம் பெறும் அநேக குமாரர்களைக் கொண்டு வருகின்றது. பலமடங் கான அநேக கோதுமை விதையை கொண்டிருக்க, கோதுமை விதைக்கு ஒரு சுமக்கின்ற ஒன்றைக் கொண்டிருக்க வேண்டியதைப் போல, கிறிஸ்துவின் ஜீவனை சுமக்கின்ற ஒன்றாய் இருக்கின்ற சபை இருக்க வேண்டும். இலைப்பரப்பு, தண்டு, பட்டு குஞ்சம் மற்றும் உமியானது விதையை சுமக்கிறவைகள், அவை விதை தாமே அல்ல, ஆதலால் காலங்களினூடாக வந்த ஒன்றுபட்ட சபையானது தாமே விதையாக அல்லாமல், உண்மையான விதையை சுமக்கிறவைகளாய் இருந்தன. ஆகவேதான் ஜீவ புஸ்தகமானது முழுமையான கோதுமைச் செடி என்று நம்மால் கூற முடிகின்றது. மறுபடியுமாக நாம் பார்ப்போம். இங்கே உண்மையான விதை விதைக்கப்பட்டது. அது இலை நுனியை கொணர்ந்தது. அது அல்ல. அது தண்டை கொணர்ந்தது. அதுவும் அல்ல. இங்கே இதனுள் கோதுமை உண்டாகப் போகும் உமிகள் வருகின்றது. அதுவும் அல்ல. பிறகு அந்த சூலகங்களின் மேல் மகரந்தத்தூள் விழுகின்றது. அந்த செடியின் ஒரு பாகம் உயிர்ப்பிக்கப்படுகின்றது. அந்த செடியினூடாக வந்த அந்த மூல விதையின் ஏதோ ஒன்று விதையாக மாறுகின்றது. ஏன் அந்த முழு செடியும் விதைக்குள்ளாக செல்லவில்லை? ஏனெனில் அந்த முடிவிற்காக அது உண் டாக்கப்பட்டது. அந்த செடியின் ஒருபாகம் மட்டுமே விதையாக ஆக முடியும். ஏனெனில் அந்த கோதுமை செடியின் பாகம் தான் நித்திய ஜீவ கோதுமையாகும். எகிப்திலிருந்து வெளியேறிய இருபது லட்சம் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எல்லாரும் பலி செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம் வெளியேறினர்; எல்லாரும் சிவந்த சமுத்திரத்தைக் கடக்கையில் ஞானஸ்நானம் பெற்றார்கள்; எல்லாரும் சமுத்திரத்தை விட்டு வெளிவந்து பரிசுத்த ஆவியின் அடையாளங்களிலும், அற்புதங்களிலும், ஆசீர்வாதங்களிலும் பங்குகொண்டனர்; எல்லாரும் தூதர்களின் உணவைச் சாப்பிட்டனர். எல்லாரும் அவர்களோடுகூடச் சென்று ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் கானான் தேசத்திற்குள் போக முடியாமல், சிலரைத் தவிர, அவர்களை பின்பற்றி கானான் தேசத்திற்குள் சென்ற அந்த பிள்ளைகளை சுமக்கிறவர்களாக மாத்திரமே இருந்தனர். இஸ்ரவேலரெல்லாரும் இஸ்ரவேலர் அல்ல. அவர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றெல்லாருடைய பெயர்களும் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கப்பட்டன. இன்றைய சபையும் அதே நிலையிலுள்ளது. ஜீவபுஸ்தகத் திலிருந்து அநேக பெயர்கள் கிறுக்கப்படும். ஆனால் ஜீவ புஸ்தகத்தில் இருக்கின்ற அந்த இன்னுமொரு ஆவணமான நித்திய ஜீவனின் புஸ்தகத்திலிருந்து ஒரு பெயரும் அகற்றப்படுவதில்லை. “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவ ருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்; குமாரனை உடையவன் ஜீவனை (நித்திய) உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் (நித்திய) ஜீவன் இல்லாதவன்'' (1 யோவான் 5:11-12). அந்த ஜீவனையுடையவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன் அவருக்குள் இருந்தனர். உலகத்தோற்றத்திற்கு முன் அவர்கள் அவருக்குள் தெரிந்து கொள்ளப்பட்டனர். மகத்தான ராஜரீக வித்து இயேசுகிறிஸ்து இப்பூமியில் புதைக்கப்பட்டு (மரித்து), அவருக்குள் இருந்த அதே ஜீவன் கோதுமைச் செடியின் மூலமாக (சபையில்) அதே ஜீவனைக் கொண்டுள்ள, ஆவியினால் அவைகள் எல்லாவற்றிலும் மூல வித்தைப் போன்ற ஏராளமான கோதுமை மணிகளைப் பிறப்பித்துக் கொண்டு இருக்கின்றது. ஆகையால், கிரயத்தினால் கொள்ளப்பட்டு மீட்கப்பட்ட (மூல சொந்தகாரரால் திரும்ப கொள்ளப்பட்ட) மணவாட்டியின் அங்கத்தினர்களின் பெயர்கள் புஸ்தகத்திலிருந்து அகற்றப்படுவ தில்லை என்பதை நாம் காணலாம். ஏவாள் ஆதாமுக்குள் இருந்தது போல், அவளும் அவருக்குள்ளிருந்து, பின்பு பிரித்தெடுக்கப் பட்டு, அவருடைய ஒரு பாகமாக விளங்குகிறாள். அவள் நியாயந் தீர்க்கப்படாமல், நியாயந்தீர்ப்பதற்கென அவரோடு சிங்காசனத் தில் உட்காருகிறாள். மணவாட்டியின் அங்கத்தினர்களில் ஒருவரை யும் அவர் இழப்பதில்லை. யூதாஸைப் போன்ற அநேகரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்து, பின்பு அழிக்கப் படும். கடைசி நாட்களில் அற்புதங்களைச் செய்த அநேகரை நோக்கி “நான் உங்களை அறியேன்'' என்று இயேசு கூறுவார். எல்லாமறியும் இயேசு அவர்களை அறியவில்லை என்று கூறும் போது, அவர்கள் மணவாட்டியாகவோ அல்லது இரண்டாம் உயிர்த்தெழுதலில் பங்கு கொண்ட நீதிமான்களாகவோ முன்குறிக் கப்படவில்லை என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டும். அவர்கள் வார்த்தைக்குள் இருந்து அதன்படி நடவாமல்- வார்த்தைக்கு வெளியே இருந்ததால் கனிகளைக் கொடுக்கவில்லை. ஆகையால், அவர்கள் மரணத்திற்குள்ளாக தீர்ப்பளிக்கப்பட்டது. பிறகு நாம் முன்பே பார்த்த விதமாக மணவாட்டியை ஆதரித்து, உதவி செய்து, ஆறுதல்படுத்தியவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் காணப்பட்டு, அவர்கள் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள். பார்வோனைப் போன்றவரின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் ஆதியிலிருந்தே எழுதப்படவில்லை. இவர்கள் அக்கினிக்கடலில் தள்ளப்படுவர். கோதுமை மணி செடியாக வளருவது சபையின் சரித்திரத் திற்கு உதாரணமாயிருக்கிறது. கோதுமை செடி முழுவதும் வித்தல்ல; கோதுமை செடி முழுவதும் அறுவடை செய்யப் படுவதில்லை. அவ்வாறே சபை முழுவதும் மணவாட்டியல்ல; அவர்களெல்லாருக்கும் நித்திய ஜீவன் கொடுக்கப்படவில்லை. சபையின் ஒரு பாகம் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டது; ஒரு பாகம் இரண்டாம் உயிர்த்தெழுதலில் செல்லத்தக்கதாக வைக்கப்படு கின்றது. ஒரு பாகம் பதரென்று கருதப்பட்டு அக்கினிக்கடலில் சுட்டெரிக்கப்பட்டது. கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, பதர் அவியாத அக்கினியில் போடப்படும் என்று யோவான் ஸ்நானன் கூறினான். “களைகளைக் கட்டுங்கள், அதன்பின்பு கோதுமை மணிகளைச் சேர்த்திடுங்கள் என்று இயேசு கூறினார். சபைகளின் ஐக்கியம் களைகளாகிய சபைகளை ஒன்று சேர்த்துக் கட்டும். களைகள் முதலில் கட்டப்பட்டு பிற்காலத்தில் அக்கினியில் போடப்படும் என்பதைக் கவனிக்கவும். அது போன்று களை களாகிய சபைகள் முதலில் கட்டப்பட்டு, ஆயிரம் வருஷ அர சாட்சியின் முடிவில் அல்லது இரண்டாம் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், அக்கினியில் தள்ளப்படும். களைகள் கட்டப்பட்ட பின்பு, எடுத்துக் கொள்ளப்படுதல் (Rapture) சம்பலிக்கும். கட்டப் படுகின்ற மற்றும் அந்திகிறிஸ்து வெளிப்படுதல் ஆகியவற்றின் இடைப்பட்ட ஏதோ ஒரு நேரத்தில் சம்பவிக்கும். அதன்பின்பு, ஒரு நாளில், தானியேல் கண்டவிதமாய் ராஜாவுக்கும் அவர் மனையாட்டிக்கும் முன்பாக எல்லாரும் நிற்பார்கள். ஆம். எல்லாரும் அங்கே இருக்கின்றனர். அப்பொழுது எல்லா புஸ்தகங்கள் திறக்கப்பட்டு, எல்லாரும் அவரவர் கிரியைகளின்படி நியாயந் தீர்க்கப்படுவார்கள். அறுவடை உண்மையாகவே முடிவடைந் தது. திறக்கப்பட்ட புஸ்தகங்கள் அப்பொழுது மூடப்பட்டது. இந்த பொருளை முடிக்கையில், இந்த கூற்றை நான் பார்க்கட்டும், இரட்சிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கர்த்தர் தற்பொழுது தொகுத்துக் கொண்டு வருகிறார் என்று கூறுவதற்கு வேதத்தில் ஒருவித சான்றுமில்லை என்று முன்பு கூறினேன். அது உண்மை . வருங்காலத்தில் பெயர்கள் தொகுக்கப்படுதலைக் குறித்த வேத வசனம் இருக்கின்றது. அது எண்பத்தேழாவது சங்கீதம் ஆகும். கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார்'' சீயோனில் பிறந்தவர்களின் பெயரெழுதுவதற்கென, சர்வத்தையும் அறிந்த கர்த்தர் கடைசி காலம் வரை காக்க வேண்டிய அவசியமில்லை, அது அவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பதைத் தடுப்பதாகும். நிச்சயமாக இவர்களெல்லாரையும் முன்னமே அவர் அறிந்திருந்தார். அப்படியெனில், இரண்டாம் உயிர்த் தெழுதலுக்குப் பின்னர், ஜீவ புஸ்தகத்தில் காணப்படும் சீயோனில் பிறக்க வேண்டியவர்களின் பெயர்களைக் கர்த்தர் ஒரு புதிய குறிப்புப் புத்தகத்தில் வைக்கின்றாரா? நிச்சயமாக அதுவே தான். ''என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்''. பரலோகத்தில் பெயர்கள் கூப்பிடுதல்! “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின் மேல் விருப்பம் வைப்பீராக'' (யோபு 14:14-15) என்று யோபு கூறுகிறான். பிரதான மேய்ப்ப ர் தமது ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார். தேவனின் சிருஷ்டிப்பின் சத்தம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைப் பூமியின் தூளிலிருந்து எழுப்பும்; உயிரோடிருக்கும் மணவாட்டியின் சரீரமும் அணுவணுவாக மகிமையின் சரீரமாக மாறும். அப் பொழுது எடுத்துக் கொள்ளப்படுதல் சம்பவிக்கும். அது ஆட்டுக் குட்டியானவர் மற்றும் அவருடைய மணவாட்டியின் மகத்தான கலியாண விருந்தாயிருக்கும். எடுத்துக்கொள்ளப்படுதல் தான் இருக்கின்ற ஒரே பெயர் கூப்பிடுதல் (roll call) காரியம் அல்ல. அங்கே இரண்டாம் உயிர்த் தெழுதலில், அந்த மகத்தான வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப் பில் பிதாவுக்கும் அவருடைய தூதர்களுக்கும் முன்பாகப் பெயர்கள் அறிக்கையிடப்படும். அறிந்தவர்கள் சிலர் என்னிடம், ஒரு மனித காதிற்குரிய ஒரு இனிமையான சத்தம், அந்த நபரினுடைய பெயரே என்று கூறினர். பொது ஜனத்திற்கு முன்பாக தங்கள் பெயர்கள் கூப்பிடப்படுவதை ஜனங்கள் எவ்வளவாக விரும்புகின்றனர். உன்னுடைய பெயர் ஜீவ புஸ்தகத்திலிருந்து, அது பரிசுத்த தூதர்களுக்கு முன் வெளிப்படுத்தும்படியாக அதிலேயே இருக்குமானால், தேவன் உன் பெயரைக் கூப்பிடும் இனிமையான சத்தத்தைப்போல, பூமியிலுள்ள எந்த ஒரு சத்தமும் உன் பெயரை இனிமையாய் ஒலிக்காது. “பிதாவே, இவர்கள் தங்கள் பூலோகப் பிரயாணத்தின் நாட்களில் மனிதர் முன் என் நாமத்தை அறிக்கையிட்டனர். இப்பொழுது உமக்கு முன்பாகவும் தூதர்களுக்கு முன்பாகவும் இவர்களுடைய நாமத்தை நான் அறிக்கையிடுவேன்'' என்று இயேசு கூறுவார். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்''. இன்னும் ஒரு விசை ஆவியானவர் பேசிவிட்டார். ஆவியானவர் இதற்கு முன்பிருந்த சபைகளுக்குக் கூறிய அனைத்தும் சம்பவித்தன என்று சரித்திர வாயிலாக நாம் நிரூபித்தோம், மற்றுமொரு காலமும் சென்றுவிட்டது, எவ்வாறு இருக்கும் என்று அவர் கூறினவிதமாகவே நடந்தேறியது. ஆவியானவர் தம்முடைய எல்லா வாக்குத்தத்தத்தையும் நிறை வேற்ற ஒருபோதும் தவறுவதில்லை என்னும் காரியமானது, கடைசிநாளின் மணவாட்டியாக இருப்போம் என்று நம்புகிற நமக்கு எப்படிப்பட்ட ஒரு ஆறுதலாயிருக்கிறது, ஏனெனில் அது நம்முடைய இருதயத்தை துள்ளி குதிக்கச்செய்கின்றது. சர்தை சபையின் காலத்தில் அவர் உண்மையுள்ளவராயிருந்தது போல் நம்முடைய சபையின் காலத்திலும் அவர் உண்மையுள்ளவரா யிருக்கிறார். அக்காலத்து மக்கள் பெற்றது போன்று, நாமும் கிருபையும் வல்லமையும் அவரிடத்திலிருந்து பெறுவோம். இதை மனதில் கொண்டு, பரிபூரணமடைந்து, கர்த்தரை ஆகாயத் தில் சந்தித்து அவரோடு என்றென்றைக்கும் ஜீவிப்போமாக. (ஏழு சபைக்காலங்களின் வியாக்கியானம் என்ற புத்தகத்தில், சர்தை சபையின் காலம் என்ற அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதியாகும்)